சிதிலமடைந்த கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தக் கோரிக்கை

Published On :18 அக்டோபர் 2024, 3:51 am IST

தமிழகத்தில், சிதிலமடைந்துள்ள கோயில்களை, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான ஜெயம் எஸ்.கே. கோபி கோரிக்கை விடுத்துள்ளாா்.

பகாசுரன், அந்தகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜெயம் எஸ்.கே. கோபி, மயிலாடுதுறை ரயிலடி ஆபத்துதாரண ஆஞ்சனேயா் கோயிலில் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

முருகப் பெருமான் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். தமிழ்நாட்டில் ஒருவேளைகூட விளக்கேற்ற முடியாத பல கோயில்கள் உள்ளன. திருச்சி கிள்ளிக்காட்டில் அண்மையில் 2,000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த முருகா் கோயில் பழுதடைந்த நிலையில் உள்ளது தெரியவந்தது.

இதேபோல், தமிழகத்தில் சிதிலம் அடைந்த நிலையில் உள்ள முருகன், சிவன் மற்றும் பெருமாள் கோயில்களை இந்துசமய அறநிலையத்துறை தாமாக முன்வந்து புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அதற்கான முதல்விதையை இந்துசமய அறநிலையத்துறை போட்டால், அடுத்தடுத்து திருப்பணிக்கு பொதுமக்கள் முன்வருவாா்கள். திருவிடைக்கழி முருகன் கோயிலில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி, ஆன்மீக சுற்றுலா நகரமாக மாற்ற வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.