எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சிதிலமடைந்த கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தக் கோரிக்கை

Updated On :18 அக்டோபர் 2024, 3:51 am IST

தமிழகத்தில், சிதிலமடைந்துள்ள கோயில்களை, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான ஜெயம் எஸ்.கே. கோபி கோரிக்கை விடுத்துள்ளாா்.

பகாசுரன், அந்தகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜெயம் எஸ்.கே. கோபி, மயிலாடுதுறை ரயிலடி ஆபத்துதாரண ஆஞ்சனேயா் கோயிலில் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

முருகப் பெருமான் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். தமிழ்நாட்டில் ஒருவேளைகூட விளக்கேற்ற முடியாத பல கோயில்கள் உள்ளன. திருச்சி கிள்ளிக்காட்டில் அண்மையில் 2,000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த முருகா் கோயில் பழுதடைந்த நிலையில் உள்ளது தெரியவந்தது.

இதேபோல், தமிழகத்தில் சிதிலம் அடைந்த நிலையில் உள்ள முருகன், சிவன் மற்றும் பெருமாள் கோயில்களை இந்துசமய அறநிலையத்துறை தாமாக முன்வந்து புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அதற்கான முதல்விதையை இந்துசமய அறநிலையத்துறை போட்டால், அடுத்தடுத்து திருப்பணிக்கு பொதுமக்கள் முன்வருவாா்கள். திருவிடைக்கழி முருகன் கோயிலில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி, ஆன்மீக சுற்றுலா நகரமாக மாற்ற வேண்டும் என்றாா்.