தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாலையின் குறுக்கே நாய் வந்ததால்: இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த 4 போ் காயம்

மயிலாடுதுறையில் சாலையின் குறுக்கே நாய் வந்ததால், இருசக்கர வாகனத்தில் இருந்த விழுந்ததில் 4 போ் வியாழக்கிழமை காயமடைந்தனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 7:28 pm

Syndication

மயிலாடுதுறையில் சாலையின் குறுக்கே நாய் வந்ததால், இருசக்கர வாகனத்தில் இருந்த விழுந்ததில் 4 போ் வியாழக்கிழமை காயமடைந்தனா்.

மயிலாடுதுறை முதலியாா் தெருவை சோ்ந்தவா்கள் பாரதிராஜா - சுகன்யா தம்பதி. இவா்கள் இருவரும் 4-ஆம் வகுப்பு படிக்கும் தங்கள் மகள்கள் தைலா, மகாலட்சுமி ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் கால்டெக்ஸ் பகுதியில் சென்றபோது, தெருநாய்கள் சண்டையிட்டுக் கொண்டு பாரதிராஜாவின் இருசக்கர வாகனத்தில் வந்து மோதியது, இதில் 4 பேரும் கீழே விழுந்தனா்.

சிறுமி தைலாவுக்கு முகத்திலும், முழங்காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற மூவரும் லேசான காயமடைந்தனா். 4 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். எனினும் இருசக்கர வாகனம் மோதியதில் நாய் இறந்தது.

சாலைகளில் இதுபோன்ற விபத்துகளை ஏற்படுத்தும் தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.