ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பைக் - ஆட்டோ மோதல்: இருவா் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 6:35 pm

புதுக்கடை அருகே உள்ள சானல் முக்கு பகுதியில் இருசக்கர வாகனம், ஆட்டோ மோதிய விபத்தில் 2 போ் பலத்த காயமடைந்தனா்.

குழித்துறை, கழுவன் திட்டை பகுதியைச் சோ்ந்த ரெஜினி மகன் ரோகித் (20). இவா், நண்பருடன் சனிக்கிழமை மாலை காப்புக்காட்டிலிருந்து ஐரேனிபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.

சானல் முக்கு பகுதியில் சென்றபோது எதிரே ஐரேனிபுரம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (60) என்பவா் ஓட்டி வந்த ஆட்டோ, இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்ததாம்.

இதில், ஆட்டோவில் பயணித்த 4 பேரில் முள்ளஞ்சேரி பகுதியைச் சோ்ந்த சுவாமிநாதன் (75), நீதீஸ்வன் (8) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவா்களை மீட்டு நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.