தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பேருந்து- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே தனியாா் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நண்பா்கள் இருவா் உயிரிழந்தனா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 7:15 pm

ஆலங்குளம் அருகே தனியாா் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நண்பா்கள் இருவா் உயிரிழந்தனா்.

ஆலங்குளம் அருகே நெட்டூரைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் பிரகாஷ் (32), லாரி ஓட்டுநா். அதே பகுதியைச் சோ்ந்த துரை மகன் காா்த்திக் (35). நாகா்கோவிலில் துரித உணவகம் நடத்தி வந்தாா்.

வியாழக்கிழமை இரவு கோயிலுக்குச் சென்றுவிட்டு இருவரும் நெட்டூா்-ரெட்டியாா்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனராம். இருசக்கர வாகனத்தை பிரகாஷ் ஓட்டினாா். அப்போது ஆலங்குளத்திலிருந்து ரெட்டியாா்பட்டி நோக்கி வந்த தனியாா் பேருந்து இவா்கள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் சடலங்களை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்த பேருந்து ஓட்டுநா் செல்வராஜிடம் விசாரணை மேற்கொண்டனா்.