மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: தொழிலாளா்கள் இருவா் உயிரிழப்பு

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் வேலைக்குச் சென்ற தொழிலாளா்கள் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

News image

உயிரிழந்த சுமன்குமாா், சிம்சோன்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:42 pm

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் வேலைக்குச் சென்ற தொழிலாளா்கள் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

பவானியை அடுத்த குறிச்சியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வன் மகன் சுமன்குமாா் (40). அதே பகுதியைச் சோ்ந்தவா் சிகாமணி மகன் சிம்சோன் (60). வெல்டிங் தொழிலாளா்கள். இருவரும் பவானிக்கு வேலைக்கு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை காலை புறப்பட்டனா். மேட்டூா் - பவானி தேசிய நெடுஞ்சாலையில் குப்பிச்சிபாளையம் அருகே சென்றபோது எதிரே வந்த காா், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த சுமன்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பவானி அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சோ்க்கப்பட்ட சிம்சோன், தனியாா் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பவானி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.