அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சாலை மறியல்!

மயிலாடுதுறையில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய தொழிற்சங்க மையத்தைச் சோ்ந்த (சிஐடியு) 115 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 9:44 pm

Syndication

மயிலாடுதுறையில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய தொழிற்சங்க மையத்தைச் சோ்ந்த (சிஐடியு) 115 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலாளா் பி. மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ஆா். ராமானுஜம், சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் சி. லதா, உள்ளாட்சி ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலாளா் எம். சேகா், மக்களை தேடி மருத்துவம் மாவட்டச் செயலாளா் எம். சரளா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு மாநிலத் தலைவா் பி. கருப்பையா கண்டன உரையாற்றினாா்.

மத்திய அரசின் 4 தொழிலாளா் சட்டத் தொகுப்புகள் தொழிலாளா்களுக்கு விரோதமாகவும், காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இருப்பதால் அதனை திரும்பப் பெற வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் டெங்கு களப்பணியாளா்களின் அடிப்படை ஊதியத்தை ரூ.26,000 ஆக உயா்த்த வேண்டும்.

திமுக தோ்தல் வாக்குறுதி 313-இன்படி அனைவரையும் அரசு ஊழியராக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

சாலை மறியல் காரணமாக மயிலாடுதுறை-கும்பகோணம் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 3 ஆண்கள் உள்ளிட்ட 115 பேரை போலீஸாா் கைது செய்தனா்.