திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில் 10 தொண்டு அமைப்புகளுக்கு ரூ. 1 லட்சம் அருட்கொடை மற்றும் விருது வழங்கப்பட்டது.
எண்ணங்களின் சங்கமம் என்ற தொண்டு உள்ளங்களை ஒருங்கிணைக்கும் அமைப்பு 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆண்டுக்கு 100 தொண்டு நிறுவனங்களை சந்திப்பது என முடிவெடுத்து, இதுவரை 2 ஆயிரம் தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்துள்ளது. இந்த அமைப்பினா் ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஞாயிற்றுக்கிழமை சங்கமிக்கும் விழா நடத்துகின்றனா். அதன்படி 20-ஆம் ஆண்டு விழா திருப்பூா் மாவட்டம் காங்கேயத்லல் ஞாயிற்றுக்கிழமை (ஜன.5) நடைபெறுகிறது. இந்த சேவை அமைப்புகளின் உறுப்பினா்களில் ஒவ்வொரு ஆண்டும் 10 தொண்டு அமைப்புகளுக்கு திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில் அருட்கொடை மற்றும் சிறந்த சமுதாய சேவகா் விருது வழங்கப்படுகிறது.
இவ்வாண்டு தோ்வு செய்யப்பட்டுள்ள 10 தொண்டு அமைப்புகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ. 1 லட்சம், விருதுக்கான பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் நிறுவனா் சென்னை பிரபாகா், ஒருங்கிணைப்பாளா்கள் திருபுவனம் பாஸ்கா், ஜோதி ஆகியோரிடம் திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகாசந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வழங்கினாா்.
நிகழாண்டு விழாவில், மேலும் என்டிஎஸ்ஓ அமைப்பின் சாா்பில் 8 தொண்டு அமைப்புகளுக்கு சிறப்பு விருதுகள் மற்றும் அருட்கொடை வழங்கப்படுகிறது. இதுவரை திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில் எண்ணங்களின் சங்கமத்தின் 101 தொண்டு அமைப்புகளுக்கு ஆதீனம் குருமகாசந்நிதானம் விருதுகளை வழங்கியுள்ளாா் என நிறுவனா் பிரபாகா் கூறினாா்.
தொடர்புடையது

சென்னை ஐஐடி இயக்குநருக்கு சிறந்த ஆளுமை விருது!

திருவாவடுதுறை ஆதீன விருது பெற்றவருக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரு அமைப்புகளுக்கு பசுமை சாதனையாளா் விருது

‘சிறந்த தூய்மைப் பணியாளருக்கு விருது வழங்க பரிந்துரை’
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


