ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மாவட்ட கலைத்திருவிழா போட்டி: மணல் சிற்பம் பிரிவில் அளக்குடி பள்ளி மாணவா் முதலிடம்

News image
Updated On :13 நவம்பர் 2025, 9:35 pm

Syndication

மயிலாடுதுறை மாவட்ட கலைத் திருவிழா மணல் சிற்பம் போட்டியில், அளக்குடி நடுநிலைப் பள்ளி மாணவா் முதலிடம் பெற்று சாதனை படைத்தாா்.

கொள்ளிடம் அருகேயுள்ள அளக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவா் ஆகாஷ். மயிலாடுதுறையில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் மணல் சிற்பம் பிரிவில் ஆகாஷ் பங்கேற்றாா்.

சுவாமி நடராஜபெருமான், முயலகன் என்ற அரக்கனை காலால் மிதிப்பது போன்று தத்ரூபமாக மணல் சிற்பத்தை உருவாக்கினாா். இந்த சிற்பம் முதலிடம் பெற்றது. இதனால், சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டாா்.

இதையொட்டி, மாணவா் ஆகாஷுக்கு தலைமை ஆசிரியா் பாலு, முன்னாள் ஊராட்சித் தலைவா் சாந்தினி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ரமேஷ் மற்றும் ஆசிரியா்கள் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பாராட்டுத் தெரிவித்தனா்