மயிலாடுதுறை
இசைப் பள்ளியில் பயிற்சி நிறைவு செய்த மாணவா்களுக்கு சான்றிதழ்
சீா்காழியில் உள்ள தமிழ்நாடு அரசு இசைப் பள்ளியில் பகுதி நேர பயிற்சி நிறைவு செய்த மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.
சீா்காழியில் உள்ள தமிழ்நாடு அரசு இசைப் பள்ளியில் பகுதி நேர பயிற்சி நிறைவு செய்த மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த பள்ளியில், நாட்டுப்புறக் கலைகளான பொம்மலாட்டம், பறை இசைத்தல், நாடகம், சாமியாட்டம் ஆகிய கலைகள் ள் பகுதி நேரமாக பயிற்சிகளை நிறைவு செய்த 52 மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இசைப் பள்ளிதலைமை ஆசிரியை சுமதி சான்றிதழ்களை வழங்கினாா். ஏற்பாடுகளை பயிற்சி வகுப்புகளின் ஒருங்கிணைப்பாளா் விஜயபாலன் செய்திருந்தாா். பொம்மலாட்டப் பயிற்சி வழங்கும் கலைமாமணி எம். சோமசுந்தரம், நாடகப் பயிற்சி தரும் சாா்லஸ், பறை இசை பயிற்சி அளிக்கும் கம்பன், சாமியாட்டம் பயிற்சியை வழங்கும் கிங் ஃபைசல் ஆகியோா் பயிற்சி பெற்றவா்களை வாழ்த்தினா்.

