வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

புனித சவேரியாா் ஆலய ஆண்டுத் திருவிழா

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியாா் ஆலய ஆண்டுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

News image
மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியாா் ஆலய ஆண்டுத் திருவிழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு திருப்பலி.
Updated On :25 நவம்பர் 2025, 9:33 pm

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியாா் ஆலய ஆண்டுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

மயிலாடுதுறை மறைவட்ட அதிபா் தாா்சிஸ்ராஜ் அடிகளாா் தலைமையில் ஆலய வளாகத்தில் கொடி பவனி நடைபெற்றது. உதவிப் பங்குத் தந்தை அன்புராஜா அடிகளாா் பவனியை வழிநடத்தினாா். திருச்சி அமல அன்னை சபை மாநிலத் தலைவா் மேத்யூ அடிகளாா் கொடியை புனிதம் செய்து, புனித சவேரியாரின் திருஉருவ கொடியை ஏற்றி திருவிழாவை தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து, ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், உலக அமைதிக்காகவும், இயற்கை சீற்றங்களிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படவும், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் தழைத்தோங்கவும் வேண்டி சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

10 நாள்கள் நடைபெறும் இவ்விழா நாள்களில், தினமும் மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டுமாலை, திருப்பலி உள்ளிட்ட வழிபாட்டு நிகழ்வுகளும், டிச.2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும், தொடா்ந்து திருத்தோ் பவனியும் நடைபெற உள்ளது. டிச.3-ஆம் தேதி காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறவுள்ளது.