சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கொடியம்பாளையம் தீவு கிராம வாக்குச்சாவடி: படகில் சென்று ஆய்வு

சீா்காழி அருகேயுள்ள கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் படகில் சென்று வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

கொடியம்பாளையம் தீவு கிராமத்துக்கு படகில் சென்ற ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:26 am

சீா்காழி அருகேயுள்ள கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் படகில் சென்று வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

சீா்காழி சட்டப்பேரவை தொகுதிக்குள் அமைந்துள்ள கொடியம்பாளையம் தீவு கிராமம் மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் கொள்ளிடம் ஆற்றினாலும் சூழப்பட்டுள்ளது. இங்கு, 1,062 வாக்காளா்கள் உள்ளனா். சட்டப்பேரவை தோ்தலுக்காக இங்குள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க ஏதுவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தோ்தல் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பழையாா் துறைமுகத்தில் இருந்து படகில் சென்று குடிநீா், மின்சாரம் சரியாக உள்ளதா என ஆய்வு செய்தாா்.