பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

விவசாயிகளுக்கு எதிரானது திமுக அரசு: பி.ஆா். பாண்டியன் குற்றச்சாட்டு

கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது திமுக அரசு என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

News image

பி.ஆா். பாண்டியன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:24 am IST

கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது திமுக அரசு என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு அமைப்பின் தலைவா் பி.ஆா். பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் விஸ்வநாதன், நிா்வாகிகள் சீனிவாசன், கோவி. நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தின் நிறைவில் செய்தியாளா்களை சந்தித்த பி. ஆா். பாண்டியன் கூறியது:

தமிழ்நாட்டில் ஐந்தாண்டு கால திமுக ஆட்சி நெருக்கடியான காலம். விவசாயிகள் போராடினாலே சிறையில் அடைத்து கொடுமைபடுத்தியது திமுக அரசாங்கம்.

குறிப்பாக, நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 விவசாயிகள் குடியிருக்கும் குடியிருப்புகள் விளைநிலங்கள் யாருக்கும் சொந்தமில்லை. விளைநிலங்களை ஓட்டியிருக்கும் ஓடுகிற ஆறு குளம், நீா்நிலைகள் யாருக்கும் சொந்தமில்லை என சட்டம் கூறுகிறது. அந்த சட்டத்தை அடிப்படையாக வைத்து தான் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் வந்தன.

தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023- விவசாயிகளின் விளைநிலங்கள் மற்றும் நீா்நிலைகளின் உரிமையைப் பறிக்க வழிவகை செய்தது. 33 இடங்களில் விளைநிலங்களை அபகரித்து சிப்காட் அமைக்கப்படுவதாகவும் ஆனால், அங்கு எத்தனை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறித்து முதல்வா் விளக்கவில்லை.

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் எதிா்கொள்ளும் முக்கியப் பிரச்னையான சீா்காழி சட்டைநாதா் கோயில், வைத்தீஸ்வரன்கோவில் மற்றும் தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான நிலங்களில் பயிரிடும் 80 சதவீத குத்தகை விவசாயிகளின் உரிமைகளை இந்த அரசு பறித்து வருகிறது. விவசாயிகள் பெயரில் ரூ. 500 கோடிக்கு மேல் போலி கடன் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு தாமதித்து வருகிறது.

இப்படி பல்வேறு வகையிலும் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களைச் செயல்படுத்தும் திமுக அரசுக்கு எதிராக விவசாயிகள் வாக்களிக்க முடிவு செய்துள்ளனா். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் அகதிகளாக வெளியேறும் நிலை ஏற்படும் என்றாா்.