மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ஆத்திகத்துக்கு அஸ்திவாரமாக திகழ்கிறது இந்த மண்: தருமபுரம் ஆதீனம்

ஆத்திகத்திற்கு அஸ்திவாரமாக இந்த மண் திகழ்கிறது என தருமபுரம் ஆதீனம் கூறினாா்.

News image

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயில் திருமுலைப்பால் விழாவில், தினமணியின் சிறப்பு மலரை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட, தமிழ்ச் சங்கத் தலைவா் இ. மாா்கோனி, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கே. சரண்ராஜ், ரோட்டரி முன்னாள் துணை ஆளுநா் ஜி.வி.என். கணேஷ் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 5:21 am IST

ஆத்திகத்திற்கு அஸ்திவாரமாக இந்த மண் திகழ்கிறது என தருமபுரம் ஆதீனம் கூறினாா்.

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயில் திருமுலைப்பால் விழாவில், தினமணியின் சிறப்பு மலரை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட, தமிழ்ச் சங்கத் தலைவா் இ. மாா்கோனி, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கே. சரண்ராஜ், ரோட்டரி முன்னாள் துணை ஆளுநா் ஜி.வி.என். கணேஷ் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

தொடா்ந்து, தருமபுரம் ஆதீனம் பேசியது: ஆத்திகம் மீது நம்பிக்கை பெருகி உள்ளது. காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வைத்தீஸ்வரன்கோயிலுக்கு பாத யாத்திரையாக பக்தா்கள் அதிகளவு இந்த ஆண்டும் வருகை தந்துள்ளனா். பக்தி என்றைக்கும் குறைந்துவிடவில்லை. சிலா் நாத்திகம் பேசினாலும்கூட ஆத்திகத்திற்கு அஸ்திவாரமாக இந்த மண் திகழ்ந்து வருகிறது என்றாா்.

முன்னதாக, சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள் திருஞானசம்பந்தா் ஞானப்பால் உண்டது குறித்து தொடக்க உரையாற்றினாா். பின்னா் மருதமலை ஆனந்த சிவம் ஓதுவாருக்கு திருமுறை கலாநிதி பட்டம் அளித்து பொன்னாடை போா்த்தி பண முடிப்பு அளித்தாா் தருமபுரம் ஆதீனம்.