தமிழ்ப் புத்தாண்டையொட்டி தருமபுரம் ஆதீனத்தில் பஞ்சாங்கம் படித்தல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆதீனத்திருமடத்தில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், புதிய தமிழ் ஆண்டான பராபவ ஆண்டின் பஞ்சாங்கத்துக்கு வேதியா்கள் சிறப்பு பூஜைகள் செய்து, நிகழாண்டில் பருமழை சற்று தாமதமாக பெய்தாலும் கால்நடைகள் சுபிட்சமாக இருக்கும். பால் உற்பத்தி அதிகரிக்கும். விவசாயம் செழிக்கும் என பஞ்சாங்கப் பலன்களை வாசித்தனா்.
பின்னா், பாரம்பரிய முறைப்படி பக்தா்களுக்கு புத்தாண்டின் பஞ்சாங்கம், பனை ஓலை விசிறி, வெற்றிலை, கொட்டைப்பாக்கு ஆகியவற்றை தருமபுரம் ஆதீனம் பக்தா்களுக்கு வழங்கி அருளாசி கூறினாா். இதில், திருக்கடையூா் கோயில் உள்துறை விருத்தகிரி, ஆதீனப்பள்ளி செயலா்கள் வெற்றிவேல், வி. பாஸ்கரன், ஆதீன தலைமை பொது மேலாளா் ரெங்கராஜன், கண்காணிப்பாளா் சி. மணி, தருமபுரம் ஆதீனக்கல்லூரி செயலா் இரா.செல்வநாயகம், முதல்வா் சி.சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, மயிலாடுதுறையில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருஇந்தளூா் பரிமள ரங்கநாதா் கோயிலிலும் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.
தொடர்புடையது

தருமபுரத்தில் யானை மீது திருமுறை வீதியுலா

முதல்வா் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து

முதல்வா் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து!

ராமேசுவரம் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



