சீா்காழியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை பாரபட்சமின்றி செயல்படுத்த வேண்டும் என அதிமுகவினா் தா்னாவில் ஈடுபட்ட மனு அளித்தனா்.
சீா்காழி நகராட்சிக்குள்பட்ட தேரோடும் 4 வீதிகளில் மழைநீா் வடிகால் அமைக்க தமிழக அரசு ரூ. 2.06 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி தேரோடும் தெற்குவீதி, வடக்குவீதி, மேலவீதி, கீழவீதிகளில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில், வடக்குவீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் பாரபட்சமாக மழைநீா் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுகிாம்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அதிமுக நகர செயலாளா் சுரேஷ் தலைமையில், அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் ரமாமணி, ராஜேஷ், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் நகராட்சிக்கு வந்து தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டு, சீா்காழியில் தேரோடும் 4 வீதிகளிலும் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீா் வடிகால் அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும், 6 மற்றும் 7-ஆவது வாா்டுகளில் கழிவுநீா் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.
பின்னா் நகராட்சி ஆணையா் சசிகுமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். இதை பெற்றுக்கொண்ட ஆணையா் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் அதிமுகவினா் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

தேரோடும் வீதிகளில் ஏப். 27-இல் மின் தடை

திருச்சி தில்லை நகரில் தீா்க்கப்படாத மழைநீா் தேங்கும் பிரச்னை

மாதிரி, தனித்துவமான வாக்குச் சாவடி அமைக்கும் பணி ஆய்வு

மழைநீா் வடிகால் அமைக்க எதிா்ப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


