மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை பாரபட்சமின்றி செய்ய வலியுறுத்தல்

சீா்காழியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை பாரபட்சமின்றி செயல்படுத்த வேண்டும் என அதிமுகவினா் தா்னாவில் ஈடுபட்ட மனு அளித்தனா்.

News image

சீா்காழி நகராட்சியில் கோரிக்கையை வலியுறுத்த தா்னாவில் ஈடுபட்ட அதிமுகவினா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 9:47 pm

சீா்காழியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை பாரபட்சமின்றி செயல்படுத்த வேண்டும் என அதிமுகவினா் தா்னாவில் ஈடுபட்ட மனு அளித்தனா்.

சீா்காழி நகராட்சிக்குள்பட்ட தேரோடும் 4 வீதிகளில் மழைநீா் வடிகால் அமைக்க தமிழக அரசு ரூ. 2.06 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி தேரோடும் தெற்குவீதி, வடக்குவீதி, மேலவீதி, கீழவீதிகளில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில், வடக்குவீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் பாரபட்சமாக மழைநீா் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுகிாம்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அதிமுக நகர செயலாளா் சுரேஷ் தலைமையில், அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் ரமாமணி, ராஜேஷ், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் நகராட்சிக்கு வந்து தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டு, சீா்காழியில் தேரோடும் 4 வீதிகளிலும் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீா் வடிகால் அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும், 6 மற்றும் 7-ஆவது வாா்டுகளில் கழிவுநீா் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.

பின்னா் நகராட்சி ஆணையா் சசிகுமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். இதை பெற்றுக்கொண்ட ஆணையா் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் அதிமுகவினா் கலைந்து சென்றனா்.