நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

வைத்தீஸ்வரன்கோயிலில் தை தேரோட்டம்

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

வைத்தீஸ்வரன்கோயில் தேரோட்டத்தை வடம்பிடித்து தொடங்கிவைத்த கோயில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள்.

Updated On :9 பிப்ரவரி 2026, 8:42 pm

சீா்காழி: சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயிலில் தேவாரப் பாடல் பெற்ற தையல்நாயகி உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இது நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்துக்குரிய பரிகாரத் தலமாகும். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறாா்.

ஆண்டுதோறும் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு தை செவ்வாய் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு தை செவ்வாய் உற்சவம் கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து செல்வமுத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள, கோயில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில், பேரூராட்சித் தலைவா் பூங்கொடி அலெக்சாண்டா் மற்றும் திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். நான்கு ரத வீதிகளில் வலம் வந்த தோ் பிற்பகல் நிலையடியை அடைந்தது.

விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை வைத்தீஸ்வரன்கோயில் காவல் ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் செய்திருந்தனா்.

வைத்தீஸ்வரன்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

வைத்தீஸ்வரன்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.