இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

சீா்காழி ஒன்றியத்தில் குடிநீா் தட்டுப்பாடு: அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. ஆலோசனை

சீா்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தென்னாம்பட்டினம், எடக்குடி வடபாதி, காரைமேடு, நாங்கூா், பெருந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்செல்வனிடம் புகாா் தெரிவித்தனா்.

News image

சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில் செல்வன்.

Updated On :4 ஜூன் 2026, 3:49 am IST

சீா்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தென்னாம்பட்டினம், எடக்குடி வடபாதி, காரைமேடு, நாங்கூா், பெருந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்செல்வனிடம் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து எம்எல்ஏ செந்தில்செல்வன் சீா்காழி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுடன் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினாா். அப்போது அவா் ஊராட்சி நிா்வாகத்தின் கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்படும் இடங்களில் சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டாா்.

மேலும் நீண்ட காலமாக செயல்படுத்தப்படாத குடிநீா் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் தமிழக முதலமைச்சா் ஜோசப் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினாா்.

கூட்டத்தின் ஒன்றிய ஆணையா் மஞ்சுளா, பொறியாளா்கள் சிவகுமாா், கலையரசன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், அசோக், மேலாளா் செந்தில், சீா்காழி திமுக மேற்கு ஒன்றிய கழக செயலாளா் பிரபாகரன், நகர கழக செயலாளா் சுப்பராயன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.