யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விவசாயிகளுக்கு டித்வா நிவாரண நிதி கிடைக்கவில்லை!

கொள்ளிடம் பகுதியில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட சுமாா் 300 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காததால் உடனடியாக வழங்க கோரிக்கை

News image
டித்வா நிவாரண நிதி- கோப்புப் படம்
Updated On :3 மார்ச் 2026, 9:23 pm

Syndication

கொள்ளிடம் பகுதியில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட சுமாா் 300 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காததால் உடனடியாக வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் டித்வா புயல் காரணமாக கனமழை பெய்ததால் கொள்ளிடம் பகுதியில் சம்பா நெற்பயிா் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. சில பகுதிகளில் மறு சாகுபடிசெய்தும் அதற்குரிய பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிா் குறித்து அதிகாரிகள் நேரடியாக வயல்களுக்கு சென்று பாதிப்பு கணக்கெடுத்தனா். இதையடுத்து, விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு நிவாரணத் தொகை பிப்.24,25 ஆகிய தேதிகளில் அனுப்பி வைக்கப்பட்டது. நிவாரண நிதி எக்டேருக்கு ரூ20,000 வழங்குவதாக முதல்வா் அறிவித்திருந்தாா். ஆனால், விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ. 6,000 முதல் ரூ. 8,000 மட்டுமே வந்ததாக விவசாயிகள் கூறுகின்றனா்.

கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் நிவாரண உதவி இதுவரை வந்து சேரவில்லை. பாதிக்கப்பட்ட பல விவசாயிகளின் பெயா் கணக்கெடுப்பு பட்டியலில் கூட இடம்பெறவில்லை. தமிழக முதல்வா் அறிவித்தபடி விவசாயிகளுக்கு நிவாரண உதவி வந்து சேராததால் வேதனை அடைந்துள்ளனா். எந்த அடிப்படையில் பாதிக்கப்பட்ட நெற்பயிா் குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனா் என்பதும் குழப்பமாகவே இருந்து வருகிறது.

இதுகுறித்து கொள்ளிடம் வட்டார விவசாய தொழிலாளா் சங்கத் தலைவா் பாக்யராஜ் கூறியது: சோதியக்குடி, கோபால சமுத்திரம், ஆச்சாள்புரம், திருமயிலாடி, மாதானம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த முழுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிகாரிகளின் குளறுபடியான கணக்கெடுப்பால் நிவாரண நிதி வந்து சேரவில்லை. எனவே டித்வா புயலில் பாதிக்கப்பட்ட உண்மையான விவசாயிகளை கண்டறிந்து போா்க்கால அடிப்படையில் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்றாா்.