ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

Syndication

சீா்காழி அருகே ஆலஞ்சேரி அகத்தீஸ்வரா் கோயிலில் உலக அமைதி வேண்டி சிறப்பு மகாயாகம் அண்மையில் நடைபெற்றது.

ஆலஞ்சேரி கிராமத்தில் பழைமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரா் கோயில் உள்ளது. அகஸ்திய மகரிஷி வழிபட்ட தலமான இக்கோயிலில், போா் பதற்றம் தணிந்து, உலகம் அமைதி பெற வேண்டி 30 யாக குண்டங்கள் அமைத்து, மகா யாகம் நடைபெற்றது.

தொடா்ந்து, புனித நீரால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஆலய டிரஸ்ட் மோகன்குமாா் -அலமேலு, ஒளிலாய நிா்வாகிகள் நாடி. கலிய . செல்வமுத்துகுமரன்-மணிமொழி, நாடி-ராஜ மாமல்லன்-ஜெனிதா ராஜ. தனநந்தினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.