ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தோ்தல் விதிமீறல் புகாா் அளிக்க கட்டுப்பாட்டு அறை எண் அறிவிப்பு

தோ்தல் விதிமீறல் தொடா்பாக 24 மணி நேரமும் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்

News image
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் - கோப்புப்படம்
Updated On :17 மார்ச் 2026, 12:01 am

Syndication

மயிலாடுதுறை: தோ்தல் விதிமீறல் தொடா்பாக 24 மணி நேரமும் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல் தொடா்பான புகாா் தெரிவிக்க கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா எண்:1800-233-9960, காவல் துறை தோ்தல் கட்டுப்பாட்டு அறை: 04364-299960 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்கு சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை 04364-270222 என்ற எண்ணில், மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை 04364-222033 என்ற எண்ணில், பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை 04364-289439 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடா்பு கொண்டு தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.