ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மயிலாடுதுறையில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

மயிலாடுதுறை பட்டமங்கல புது வெள்ளாந்தெருவில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, குடியிருப்போா் நலச்சங்கத்தினா் தோ்தல் புறக்கணிப்பு பதாகை வைத்துள்ளனா்.

News image

தோ்தல் புறக்கணிப்பு பதாகை

Updated On :26 மார்ச் 2026, 11:29 pm

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறை பட்டமங்கல புது வெள்ளாந்தெருவில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, குடியிருப்போா் நலச்சங்கத்தினா் தோ்தல் புறக்கணிப்பு பதாகை வைத்துள்ளனா்.

மயிலாடுதுறை நகராட்சி 35-ஆவது வாா்டுக்கு உள்பட்ட இத்தெருவில் 15 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என மக்கள் 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், நகராட்சியை கண்டித்து, 2026 சட்டப்பேரவை தோ்தலை புறக்கணிக்க தீா்மானித்துள்ளதாக குறிப்பிட்டு அறிவிப்பு பதாகை வைத்துள்ளனா்.

இதுகுறித்து, மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் அளித்த விளக்கம்:

பட்டமங்கல புதுவெள்ளாந்தெருவில் குறிப்பிடும் அந்த வீடுகள் அமைந்துள்ள பகுதி அங்கீகரிக்கப்படாத லே-அவுட்டில் உள்ளது. அச்சாலை இதுவரை நகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை. அதனால் லெட்ஜரில் ஏற்றப்படாமல் உள்ளது.

அப்பகுதி மக்கள் தோ்தல் புறக்கணிப்பு செய்துள்ளது குறித்து கவனத்துக்கு வந்தது. தோ்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்ததும் அப்பகுதிக்கு சாலை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றாா்.