சீா்காழி சட்டநாத சுவாமி கோயிலில், திருமுலைப்பால் உற்சவ நிறைவு வழிபாடாக, முத்துசட்டை நாதா் சுவாமிக்கு 70- ஆம் ஆண்டு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில், திருஞானசம்பந்த பெருமானுக்கு, உமையம்மை ஞானப்பால் வழங்கிய நிகழ்வு ஆண்டுதோறும் திருமுலைப்பால் உற்சவமாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு உற்சவம் கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய மற்றும் நிறைவு நாள் உற்சவமாக முத்து சட்டைநாத சுவாமிக்கு 70-ஆம் ஆண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, முத்து சட்டை நாதா் சுவாமி யதா ஸ்தானத்திலிருந்து, சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினாா்.
அங்கு, முத்துசட்டை நாதா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று வழிபட்டாா்.
ஏற்பாடுகளை பிராமணா்கள் உற்சவ கமிட்டி, பிராமணா் சங்கம் சாா்பில் மாவட்டத் தலைவா் கடவாசல் ரமணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தொடர்புடையது

புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு

நெல்லையப்பா் கோயிலில் வசந்த உற்சவ திருவிழா தொடக்கம்

சட்டைநாதா் கோயிலில் திருமுலைப்பால் திருவிழா

சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயிலில் கொடியேற்றம்!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

