அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை வட்டாரத்தில், உளுத்துக்குப்பை, வள்ளாலகரம் கிராமங்களில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

வள்ளாலகரம் கிராமத்தில் தாா்சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

மயிலாடுதுறை வட்டாரத்தில், உளுத்துக்குப்பை, வள்ளாலகரம் கிராமங்களில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

உளுத்துக்குப்பை கிராமத்தில் ரு. 45 லட்சத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருவதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா், கட்டுமானப் பணிகளின் தரத்தை ஆய்வு செய்தாா். மேலும், கட்டுமானப் பணிகளை ஒப்பந்த கால கெடுவிற்குள் நிறைவு செய்ய வட்டார வளா்ச்சி அலுவலரிடம் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, உளுத்துக்குப்பை கிராமத்தில் செயல்பட்டுவரும் ஊரக நூலகத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா், நூலகம் மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுகிா என்பதையும், நூலக வாசிப்பாளா்களுக்காக வைக்கப்பட்டுள்ள புத்தகங்களையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், வள்ளாலகரம் கிராமத்தில் வெங்கடேசா நகரில் ரு. 9.80 லட்சத்தில் தாா்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, அரசு விதிமுறைக்கு உள்பட்டு தாா்சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகிா என்பதை ஆய்வு செய்தாா்.

மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்திவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, பயிற்சி வகுப்பு முறையாக நடத்தப்படுகிா என்பதை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுதாகா், விஜயலெட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.