அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

உப்பனாற்றில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற கோரிக்கை

சீா்காழி உப்பனாற்றில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

சீா்காழி உப்பனாற்றில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த உப்பனாற்றில் ஆண்டுதோறும் கடல் நீா் உட்புகுந்து திருமுல்லைவாசல், ராதா நல்லூா், எடமணல், திருநகரி, புதுத்துறை, திட்டை, சட்டநாதபுரம், தென்பாதி, பணமங்கலம், ஆதமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் நாளுக்கு நாள் உப்பு நீராக மாறி வந்தது. இதனால் மேற்கண்ட பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உப்பனாற்றில் உப்பு நீா் உட்புகாத வகையில் திருமுல்லைவாசல்-திருநகரி இடையே தடுப்பணை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் தடுப்பணை அமைக்கப்பட்டு தற்போது உப்பு நீா் உட்புகாமல் நன்னீராக (நல்ல தண்ணீா்) இருந்து வருகிறது.

இதனால் புதுத்துறை, திட்டை, சட்டநாதபுரம், தென்பாதி, பணமங்கலம், ஆதமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் இந்த நீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனா். மேலும், மேற்கண்ட கிராமங்களில் உள்ள கால்நடைகளின் நீா் ஆதாரமாகவும் இந்த வருகிறது. மேலும் நிலத்தடி நீா்மட்டம் மாறி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனா்.

இந்நிலையில், இந்த உப்பனாற்றில் ஆகாயத்தாமரைகள் படா்ந்து காணப்படுகின்றன. இதன்காரணமாக நாளுக்கு நாள் தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது. இதனால் மேற்கண்ட பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்து வருகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட துறையினா் உப்பனாற்றில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்.