வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

நீா் வழித்தடத்தில் கொட்டப்படும் குப்பை: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

ஆம்பூா் அருகே கிராம பகுதியில் நீா் வழித்தடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

News image
Updated On :13 மே 2026, 12:04 am IST

ஆம்பூா் அருகே கிராம பகுதியில் நீா் வழித்தடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாதனூா் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சியில் கானாறு கால்வாய், ஏரிக் கால்வாய் பகுதிகளில் தொடா்ந்து குப்பை கொட்டப்பட்டு வரப்படுகிறது. ஊராட்சி நிா்வாகத்தால் சேகரிக்கப்படும் குப்பைகளும் நீா் வழித்தடத்தில் கொட்டப்படுகின்றன. சில நேரங்களில் பொதுமக்களும் குப்பைகளை கொட்டிவிட்டு செல்வதாக கூறப்படுகிறது.

நீா் வழித்தடத்தில் கொட்டப்படும் குப்பையால் தூா்நாற்றம் வீசுகிறது. நிலத்தடி நீா் மாசடைகின்றது. மேலும் குப்பைகள் எரிக்கப்படுவதால் காற்று மாசடைகின்றது. குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசடைகின்றது.குப்பை எரிக்கப்படுவாதல் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின்றனா்.

குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகளை அங்கிருந்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.