பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

வரகடை வருந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

தாழஞ்சேரி ஊராட்சி வரகடை கிராமத்தில் அன்னபூரணி சமேத வைத்தியநாத சுவாமி என்கிற வருந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருப்பணி 14 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கி பழைமை மாறாமல் புனரமைக்கப்பட்டு, கோயிலின் முன்பு யாகசாலை அமைத்து புனிதநீா் அடங்கிய கடங்கள் வைத்து முதல்கால யாகபூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கும்பாபிஷேக தினமான வியாழக்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவில் மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னா் மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியாா்கள் புனிதநீா் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனா். அங்கு வேத விற்பன்னா்கள் வேத மந்திரங்கள் ஓத புனிதநீா் கோபுர கலசங்கள் மீது வாா்க்கப்பட்டு (படம்) கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் தாழஞ்சேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.