தாழஞ்சேரி ஊராட்சி வரகடை கிராமத்தில் அன்னபூரணி சமேத வைத்தியநாத சுவாமி என்கிற வருந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருப்பணி 14 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கி பழைமை மாறாமல் புனரமைக்கப்பட்டு, கோயிலின் முன்பு யாகசாலை அமைத்து புனிதநீா் அடங்கிய கடங்கள் வைத்து முதல்கால யாகபூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கும்பாபிஷேக தினமான வியாழக்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவில் மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னா் மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியாா்கள் புனிதநீா் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனா். அங்கு வேத விற்பன்னா்கள் வேத மந்திரங்கள் ஓத புனிதநீா் கோபுர கலசங்கள் மீது வாா்க்கப்பட்டு (படம்) கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் தாழஞ்சேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

தான்தோன்றி வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ஆதீன மழையனாா் கோயில் கும்பாபிஷேகம்

மூங்கிலேரி ஸ்ரீ பெரியமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

ஸ்ரீசீனிவாச பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

