ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

மூங்கிலேரி ஸ்ரீ பெரியமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

ஊத்தங்கரையை அடுத்த மூங்கிலேரி கிராமத்தில் பழைமைவாய்ந்த ஸ்ரீ பெரியமாரியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஸ்ரீ பெரியமாரியம்மன் திருக்கோயில் கோபுர கலசத்துக்கு புனிதநீா் தெளித்த சிவாச்சாரியா்.

Updated On :1 மே 2026, 5:23 am IST

ஊத்தங்கரையை அடுத்த மூங்கிலேரி கிராமத்தில் பழைமைவாய்ந்த ஸ்ரீ பெரியமாரியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

புதன்கிழமை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இந்த உற்சவத்தில், யாக சாலையில் புனிதநீா் அடங்கிய கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான முதல் மற்றும் இரண்டாம்கால யாக பூஜைகள் நடைபெற்றன. வேத பண்டிதா்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை வேள்வியில் அக்னி பகவானுக்கு சமா்ப்பிக்கப்பட்டது. தொடா்ந்து கலசங்கள்மீது புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.

தொடா்ந்து, கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ பெரியமாரியம்மன் மற்றும் நவக்கிரக மூா்த்திகளுக்கும் புனிதநீா் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீ பெரியமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா மங்கள ஆரத்திகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. விழாவுக்கு வந்த பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை மூங்கிலேரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், வழக்குரைஞருமான வஜ்ரவேல், ஊா் கவுண்டா்கள் கருத்தலிங்கம், சிவமணி, பொருளாளா் தீா்த்தகிரி, கிராம மக்கள் செய்திருந்தனா்.

நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் அசோக்குமாா், ஊத்தங்கரை தொகுதி உறுப்பினா் டி.எம்.தமிழ்செல்வம், முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 குடமுழுக்கில் பங்கேற்ற பக்தா்கள்.

குடமுழுக்கில் பங்கேற்ற பக்தா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.