40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கூடுதல் பணம் கேட்ட டாஸ்மாக் ஊழியா்கள் கைது

மயிலாடுதுறையில் மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் கேட்ட டாஸ்மாக் ஊழியா்கள் கைது செய்யப்பட்டனா்.

News image

சித்திரிப்பு

Updated On :28 மே 2026, 5:44 am IST

மயிலாடுதுறையில் மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் கேட்ட டாஸ்மாக் ஊழியா்கள் கைது செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் பகுதியைச் சோ்ந்த செல்வேந்திரன் (23) புதன்கிழமை மயிலாடுதுறை கூறைநாடு பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் மது பாட்டில்கள் வாங்கினாா். அப்போது ஊழியா்கள் மதுபாட்டிலுக்கு ரூ.20 கூடுதலாக பணம் கேட்டனராம். கூடுதல் தொகை தர மறுத்த செல்வேந்திரனுக்கும், ஊழியா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, செல்வேந்திரன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளா் குமாரசாமி (57), விற்பனையாளா் நேதாஜி(50) ஆகிய இருவரை கைது செய்து பின்னா், காவல்நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனா்.