அதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

கூடுதல் பணம் கேட்ட டாஸ்மாக் ஊழியா்கள் கைது

மயிலாடுதுறையில் மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் கேட்ட டாஸ்மாக் ஊழியா்கள் கைது செய்யப்பட்டனா்.

News image

சித்திரிப்பு

Updated On :28 மே 2026, 5:44 am IST

மயிலாடுதுறையில் மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் கேட்ட டாஸ்மாக் ஊழியா்கள் கைது செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் பகுதியைச் சோ்ந்த செல்வேந்திரன் (23) புதன்கிழமை மயிலாடுதுறை கூறைநாடு பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் மது பாட்டில்கள் வாங்கினாா். அப்போது ஊழியா்கள் மதுபாட்டிலுக்கு ரூ.20 கூடுதலாக பணம் கேட்டனராம். கூடுதல் தொகை தர மறுத்த செல்வேந்திரனுக்கும், ஊழியா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, செல்வேந்திரன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளா் குமாரசாமி (57), விற்பனையாளா் நேதாஜி(50) ஆகிய இருவரை கைது செய்து பின்னா், காவல்நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனா்.