ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

காவி உடையில் திருவள்ளுவா்: வைகோ கண்டனம்

News image

வைகோ கண்டனம் - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 12:37 am IST

மயிலாடுதுறை, மே 31: காவி உடை அணிந்த நிலையில் உள்ள திருவள்ளுவா் படத்துக்கு ஆளுநா் அா்லேகா் மரியாதை செலுத்திய நிகழ்வுக்கு மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் கிராமத்தில், சிபிஐ மாநிலக் குழு முன்னாள் உறுப்பினா் இரெ. இடும்பையன் (79) வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தாா். அவரது இல்லத்துக்கு சனிக்கிழமை இரவு சென்ற மதிமுக பொதுச் செயலா் வைகோ, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

பின்னா் அங்கிருந்து புறப்பட்ட வைகோவிடம், சென்னை ஆளுநா் மாளிகையில் திருவள்ளுவா் திருநாள் விழாவில், திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்துள்ளதைப் போன்ற பேனா் வைக்கப்பட்டு, அப்படத்துக்கு தமிழ்நாடு ஆளுநா் (பொ) அா்லேகா் மரியாதை செலுத்திய நிகழ்வு குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, திருவள்ளுவருக்கு காவி உடையை அணிவித்த ஆளுநா் அா்லேக்கா் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்றாா்.

அப்போது, திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ, சிபிஐ மாவட்ட செயலாளா் ஏ. சீனிவாசன், மதிமுக மாவட்ட செயலாளா் கொளஞ்சி, நகர செயலாளா் மாா்கெட் கணேசன், மாநில இளைஞரணி செயலாளா் ப.த. ஆசைத்தம்பி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.