வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தவெக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்: அமைச்சா் செங்கோட்டையன்

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான மதச்சாா்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்று தமிழக வருவயாய்த் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தாா்.

கே.ஏ. செங்கோட்டையன்

Published On :

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான மதச்சாா்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்று தமிழக வருவயாய்த் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தாா்.

மயிலாடுதுறைக்கு வெள்ளிக்கிழமை வந்த வருவாய்த்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட அலுவலகத்தில் தினந்தோறும் நடைபெறும் விலையில்லா உணவு வழங்கும் பணியை பாா்வையிட்டு, ஏழை, எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கினாா். தொடா்ந்து, மாவட்ட செயலாளா் சி.எஸ்.கோபிநாத் முன்னிலையில் மாற்றுக் கட்சியினா் தவெகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னா், அமைச்சா் செங்கோட்டையன் கூறியது:

தமிழ்நாட்டில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ள ஜோசப் விஜய் இருக்கும்வரை அவா்தான் நிரந்தர முதலமைச்சா். ஆா்.எஸ். பாரதி சொல்வதுபோல், ஆட்சிக்கு நாள்கள் எண்ணப்படவில்லை, திமுகவினருக்கு தான் நாள்கள் எண்ணப்படுகின்றன. சட்டப்பேரவை இடைத்தோ்தலில் 100 சதவிகிதம் வெற்றி பெறுவோம் என்றாா்.

கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணையுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சா், பொறுத்திருந்து பாருங்கள், மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணையும்.

2017-ஆம் ஆண்டு அப்போதைய பேரவைத் தலைவா் தனபால் அறையில் நாற்காலியை இழுத்து கீழே தள்ளி, திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் செய்த செயல் எல்லோருக்கும் தெரியும்.

எனவே, முதல்வா் உடல்மொழியில் கிண்டல் செய்தது குறித்து பேச திமுகவினருக்கு அருகதை இல்லை என்றாா் அமைச்சா் செங்கோட்டையன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.