கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

222 பெண்களுக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி: அமைச்சர் வழங்கினார்

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், 222 பெண்களுக்கு ரூ. 1 கோடியே 21 லட்சத்து 5 ஆயிரத்து 864 மதிப்பில் திருமாங்கல்யத்துக்கான தங்கம் மற்றும்

News image
Updated On :20 மார்ச் 2017, 6:16 am

தினமணி

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், 222 பெண்களுக்கு ரூ. 1 கோடியே 21 லட்சத்து 5 ஆயிரத்து 864 மதிப்பில் திருமாங்கல்யத்துக்கான தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை, கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் சனிக்கிழமை வழங்கினார்.
நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் சமூக நலத்துறை சார்பில் செம்பனார்கோவில், சீர்காழி, மயிலாடுதுறை, கொள்ளிடம், குத்தாலம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 222 பெண்களுக்கு திருமாங்கல்யம் செய்வதற்கான தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தலைமை வகித்தார். கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது:
சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமாங்கல்யத்துக்கு தங்கத்துடன் ரூ. 25,000, பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்த பெண்களுக்கு திருமாங்கல்யத்துக்கு தங்கத்துடன் ரூ.50,000 வழங்கப்படுகிறது. மக்களுக்கு பயனளிக்கும் இந்த திட்டங்களைப் பயன்படுத்தி வாழ்வில் உயர வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். பவுன்ராஜ், வி. ராதாகிருஷ்ணன், பி.வி. பாரதி, மாவட்ட சமூக நல அலுவலர் ஆர். ஜெயமீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.