அரசுப் பள்ளியில் கணினி திருட்டு

செம்பனார்கோவில் அருகேயுள்ள ஆக்கூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மர்ம நபர்கள் கணினியை திருடிச் சென்றுள்ளனர்.
Updated on
1 min read

செம்பனார்கோவில் அருகேயுள்ள ஆக்கூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மர்ம நபர்கள் கணினியை திருடிச் சென்றுள்ளனர்.
செம்பனார்கோவில் அருகேயுள்ள ஆக்கூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மழையின் காரணமாக பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டு புதன்கிழமை திறக்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியர் சித்ரா பள்ளியை சுற்றி பார்த்த போது அலுவலகம் மற்றும் கணினி அறை உடைக்கப்பட்டு இரு கணினி மற்றும் கணினி சாதனங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமையாசிரியர் சித்ரா செம்பனார்கோயில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com