வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வேதாரண்யத்தில் இலங்கையைச் சேர்ந்தவர் கைது

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் சுற்றித் திரிந்த இலங்கையைச் சேர்ந்தவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 2:15 am

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் சுற்றித் திரிந்த இலங்கையைச் சேர்ந்தவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யத்தை அடுத்த பெரிய குத்தகை பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், இளைஞர் ஒருவர் நிற்பதாக வேதாரண்யம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், இலங்கை மானம் மாவட்டம் பருத்தித்துறை,  இன்பச்செட்டி  பகுதியைச் சேர்ந்தவர்  எம்.எம். சிறிமுருகன் (32) என்பதும், இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக மீன்பிடி படகு  மூலம் இந்தியாவுக்கு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், பாஸ்போர்ட் சட்ட  விதிகளின்படி வேதாரண்யம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.