சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

காவிரியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 28 பேர் கைது

நாகை மாவட்டம், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்பைச் சேர்ந்த 28 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:48 am IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்பைச் சேர்ந்த 28 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து, மயிலாடுதுறை  துலாக்கட்டக் காவிரியின் அருகே ஒன்றிணைந்த இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, காவிரிஆற்றில் இறங்க முற்பட்ட 28 பேரை போலீஸார் கைது  செய்தனர். பின்னர், அவர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.