நாகை நகராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
நாகூரில் ரூ. 6 கோடி மதிப்பில் நடைபெறும் புதை சாக்கடைத் திட்ட சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள், அக்கரைகுளம் பகுதியில் ரூ. 3.15 கோடி மதிப்பில் நடைபெறும் குடிநீர் ஆதார மேம்பாட்டுத் திட்டப் பணிகள், நகராட்சி மேட்டு பங்களா பகுதியில் ரூ. 60 லட்சம் மதிப்பில் நடைபெறும் பூங்கா அமைக்கும் பணிகள் ஆகியவற்றை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, நாகை மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் ரூ. 64 லட்சம் மதிப்பில் நடைபெறும் உள்நோயாளிகளுடன் தங்குவோருக்கான ஓய்வறை கட்டும் பணியை அவர் ஆய்வு செய்தார்.
நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் வசந்தன் மற்றும் அலுவலர்கள்உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விடுமுறை தினம்: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

முன்னாள் மாணவா்கள் தங்கள் அனுபவத்தை பகிர வேண்டும்: விஐடி துணைத் தலைவா்

முதல்வராக விஜய் பொறுப்பேற்பு! கரூரில் காங்கிரஸ்-தவெக கூட்டணியினா் காமராஜா் சிலைக்கு மாலை அணிவிப்பு

இளைஞா் தற்கொலை
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
