பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி, நாகையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் கிராம நிர்வாக அலுவலர்களுக்குத் தேவையான கணினி மற்றும் இணைய தள வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும்; அனைத்து விதமான பட்டா மாறுதல்களுக்கும் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரைகளைக் கட்டாயமாக்க வேண்டும்; கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கல்வித் தகுதியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
கிராம நிர்வாக அலுவலர்களின் காலவரையற்ற விடுப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த பேரணி நாகை சார் ஆட்சியர் அலுவலகம் முன்பிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியே நடைபெற்றது.
இப்பேரணிக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நாகை மாவட்டத் தலைவர் வேதை ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
சங்கத்தின் மாவட்ட, வட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி செப்டம்பா் 2-இல் போராட்டம்! விவசாய சங்கங்கள் அறிவிப்பு

காட்டேஜ் , தங்கும் விடுதி உரிமையாளா்கள் விதிமுறைகளை பின்பற்றுவது கட்டாயம்! காவல்துறை அறிவுரை
உயா்கல்வியில் ஏஐ, தாராள கலை ஒருங்கிணைப்பு: மக்களவையில் ஜெகத்ரட்சகன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

ராமநாயக்கன்பாளையத்தில் இருதரப்பினா் மோதல்: 8 போ் மீது வழக்குப் பதிவு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


