தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

புயலால் பாதிக்கப்பட்ட பேருந்து பணிமனைகளை சீரமைக்கக் கோரிக்கை

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளை சீரமைக்க வேண்டும் என தமிழக

Updated On :25 டிசம்பர் 2018, 8:43 am IST

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளை சீரமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர் சம்மேளனம் (ஏஐடியுசி) மாநிலப் பொதுச் செயலாளர் ஜெ.லெட்சுமணன் கோரிக்கை
விடுத்தார்.
 நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட வேளாங்கண்ணி,கீழையூர், விழுந்தமாவடி உள்ளிட்டப் பகுதிகளில் பொதுமக்களுக்கு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் நிவாரண உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. 
இதில், ஜெ.லெட்சுமணன் பங்கேற்று, பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். பின்னர், அவர் கூறியது:
 புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நிவாரணம் இதுவரை கிடைக்கவில்லை. கும்பகோணம் கோட்டத்துக்குள்பட்ட அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைகள் புயல் சீற்றத்தால் சேதமடைந்துள்ளன. இதனால், தொழில்நுட்பப் பணியாளர்களின் பணிகள் பாதிப்படைந்துள்ளன. எனவே, இந்த பணிமனைகளை உடனடியாக சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 4 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள விடுப்பு ஊதியத் தொகையில் பாதித் தொகையை புயல் பாதித்த மாவட்டங்களில் பணிபுரியும் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர் சம்மேளன மத்திய சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.பாஸ்கரன், துணைப் பொதுச் செயலாளர் நடேச.கோபிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.