திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புயலால் முறிந்த மரங்களை அகற்ற தன்னார்வலர்கள் முன்வர வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்

புயலால் சேதமடைந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் விவசாயிகளுக்கு உதவ தன்னார்வ

Updated On :25 டிசம்பர் 2018, 8:47 am IST

புயலால் சேதமடைந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் விவசாயிகளுக்கு உதவ தன்னார்வ நிறுவனங்கள் முன்வரவேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெற்றுவரும் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். அங்குள்ள பெத்துக்குட்டித் தெருவில் திருப்பூர் மத்திய அரிமா சங்கம், சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனம் மற்றும் பெட்ரோலிய வணிகர் சங்கம் இணைந்து மேற்கொண்டு வரும் மரங்களை அகற்றும் பணியை ஆட்சியர் பார்வையிட்டார்.
மேலும், உதவி பெறும் பள்ளி சீரமைப்பு, மீனவர் காலனியில் படிந்துள்ள கடல் களிமண் அகற்றும் பணிகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் கூறியது: நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளன.
பாதிப்புக்குள்ளானப் பகுதிகளில் 98 சதவீதம் மின்பாதை சீரமைப்புப் பணிகள் முடிவுற்று, வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாய மின் இணைப்புகள் மற்றும் உப்பளங்களுக்கான மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
புயலால் முறிந்த மரங்களை அகற்றும் பணி சவாலாக உள்ளது. புஷ்பவனம் ஊராட்சியில் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து 25 நவீன மரம் அறுக்கும் இயந்திரங்களைக் கொண்டு, முதற்கட்டமாக சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சேதமடைந்துள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகளில் ஈடுபட தனியார் நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் முன்வரவேண்டும். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.  நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 209 அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுற்றுச் சுவர்களை சீரமைக்க சி.பி.சி.எல். நிறுவனத்திடம் ரூ.1.75 கோடி நன்கொடை பெறப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் ஆட்சியர்.
இந்த ஆய்வின்போது, வேளாண்மைத் துறை செயற்பொறியாளர் செல்லக்கண்ணு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன், வட்டாட்சியர் 
இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.