புயல் சீற்றப் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, நாகைக்கு ஏற்கெனவே அறிவித்த, புதைவட மின் விநியோகத் திட்டப் பணிகளை அரசு விரைந்து தொடங்க வேண்டும் என, நாகை இந்திய வர்த்தகத் தொழிற்குழுமம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாகை, இந்திய வர்த்தக தொழிற்குழும செயற்குழுக் கூட்டம், நாகையில் அண்மையில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் வி. ராமச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் சுபாஷ்சந்திரன், துணைத் தலைவர் டி. மதியழகன், இணைச் செயலாளர் எஸ்.எம்.ஏ. கணேசன், பொருளாளர் எஸ். தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீர்மானங்கள்: நாகை மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செயல்பாட்டுக்காக உயர் அழுத்த மின் மாற்றி அமைக்கவும், சிடி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவுக்கு உடனடியாக மருத்துவரை நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம் அமைப்புப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
நாகை பெரிய கடைத் தெருவில் தரைக்கடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, ஆசாத் மார்க்கெட், பழைய அந்திக்கடை, நாகை பழையப் பேருந்து நிலையம் பகுதிகளில் தரைக்கடைகளுக்குத் தனி இடம் ஒதுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புயல் சீற்றம் போன்ற இயற்கைப் பேரிடர்களைக் கருத்தில் கொண்டு நாகை, நாகூர், வெளிப்பாளையம் ஆகிய பகுதிகளில் புதைவடம் மூலம் மின் விநியோகம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.
ஆனால், அந்தத் திட்டப் பணிகள் ஏதும் தொடங்கப்படாமல் உள்ளன. எனவே, நாகையில் புதைவட மின் விநியோகத் திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்த அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதென்ன அம்புபாச்சி மேளா? எங்கு விசேஷம்? முழு தகவல்!

வாட்ஸ்ஆப் வெப்பில் விடியோ கால், குரூப் வாய்ஸ் அம்சங்கள்!

மொஹரம் பண்டிகை: எழும்பூர் - போத்தனூர் இடையே சிறப்பு ரயில்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


