திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிலைக் கடத்தல் வழக்கில் சரணடைந்த இருவர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் பேரிகை சாலையில் உள்ள முத்துராயசுவாமி கோயிலில் 4 சுவாமி சிலைகள் திருடப்பட்ட வழக்கில்

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:19 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் பேரிகை சாலையில் உள்ள முத்துராயசுவாமி கோயிலில் 4 சுவாமி சிலைகள் திருடப்பட்ட வழக்கில்  கர்நாடகத்தைச் சேர்ந்த  வாசிம்அக்ரம், சேட்டு என்கிற ஜபா, ஜனோ என்கிற சாவூத் , சமீர் ஆகிய  நால்வரையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்  தேடி வந்தனர். இதில் வாசிம் அக்ரம் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து உடைக்கப்பட்ட சிலையின் பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து தலைமறைவான மற்ற மூவரில் சமீர் மற்றும் ஜனோ (எ) சையது சாவூத் ஆகிய இருவரும் பாகலூர் கிராம நிர்வாக அலுவலரிடம்  சனிக்கிழமை சரணடைந்தனர். 
அவர் அளித்த தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஒசூர் சென்று  இருவரையும் கைது செய்து  கும்பகோணம், சிலை திருட்டு தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில்  அடைத்தனர். சேட்டு என்கிற ஜபா மட்டும் இன்னும் சிக்கவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.