மின் கசிவால் கூரை வீடு தீக்கிரை
பொறையாறு அருகேயுள்ள அனந்தமங்கலம் கிராமத்தில் மின்கசிவால் ஞாயிற்றுக்கிழமை கூரை வீடு எரிந்து தீக்கிரையானது.


பொறையாறு அருகேயுள்ள அனந்தமங்கலம் கிராமத்தில் மின்கசிவால் ஞாயிற்றுக்கிழமை கூரை வீடு எரிந்து தீக்கிரையானது.
அனந்தமங்கலம் கீழத்தெருவில் வசிப்பவர் ரேவதி (42). இவரது கூரை வீட்டில் ஞாயிற்றுக்கிழமை காலையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு, முற்றிலும் எரிந்தது. வீட்டில் இருந்த பீரோ, கட்டில், மின்சாதனப் பொருள்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து தகவல் அறிந்த பூம்புகார் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் கூறி, அரசின் நிவாரணத் தொகையாக ரூ. 5 ஆயிரம் மற்றும் இலவச வேட்டி- சேலை, அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்கினார். அப்போது, அவருடன் தரங்கம்பாடி வட்டாட்சியர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...