வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

குதம்பை சித்தர் குருபூஜை விழா

மயிலாடுதுறை அபயாம்பிகை உடனுறை  மயூரநாதர் கோயிலில், குதம்பை சித்தரின் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 5:45 am IST

மயிலாடுதுறை அபயாம்பிகை உடனுறை  மயூரநாதர் கோயிலில், குதம்பை சித்தரின் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோயில், 18 சித்தர்களில் ஒருவரான குதம்பை சித்தர் ஐக்கியமாகிய தலம் என போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில், குதம்பை சித்தர் குருபூஜை விழா நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான இந்நிகழ்ச்சியை முன்னிடடு, குதம்பை சித்தருக்கு சிறப்பு அபிஷேக  ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து மகாபிஷேகம் நடைபெற்றது.
குருபூஜை விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக குதம்பை சித்தர் அருட்கண்ணிப் பாடல்கள் எனும் நூல் வெளியிடப்பட்டது. நூலாசிரியர் வை. அம்பிகாபதி நூலை வெளியிட, அதை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே. ராஜேந்திரன், விஷ்வ இந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் வாஞ்சிநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குதம்பை சித்தர் வார வழிபாட்டு மன்றத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.