முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

குதம்பை சித்தர் குருபூஜை விழா

மயிலாடுதுறை அபயாம்பிகை உடனுறை  மயூரநாதர் கோயிலில், குதம்பை சித்தரின் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 5:45 am IST

மயிலாடுதுறை அபயாம்பிகை உடனுறை  மயூரநாதர் கோயிலில், குதம்பை சித்தரின் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோயில், 18 சித்தர்களில் ஒருவரான குதம்பை சித்தர் ஐக்கியமாகிய தலம் என போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில், குதம்பை சித்தர் குருபூஜை விழா நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான இந்நிகழ்ச்சியை முன்னிடடு, குதம்பை சித்தருக்கு சிறப்பு அபிஷேக  ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து மகாபிஷேகம் நடைபெற்றது.
குருபூஜை விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக குதம்பை சித்தர் அருட்கண்ணிப் பாடல்கள் எனும் நூல் வெளியிடப்பட்டது. நூலாசிரியர் வை. அம்பிகாபதி நூலை வெளியிட, அதை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே. ராஜேந்திரன், விஷ்வ இந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் வாஞ்சிநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குதம்பை சித்தர் வார வழிபாட்டு மன்றத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.