கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மாவட்ட கல்வி அலுவலகம் அமைக்க வலியுறுத்தல்

வேதாரண்யத்தை மையமாக கொண்டு மாவட்ட கல்வி அலுவலகம் அமைக்க வேண்டும் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. 

Updated On :23 ஜூலை 2018, 5:48 am IST

வேதாரண்யத்தை மையமாக கொண்டு மாவட்ட கல்வி அலுவலகம் அமைக்க வேண்டும் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. 
வேதாரண்யத்தில் அண்மையில் நடைபெற்ற தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார  செயற்குழுக்  கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி வரையிலான அகல ரயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும், வேதாரண்யத்தை மையமாக கொண்டு தலைஞாயிறு, கீழையூர் ஒன்றியங்களை இணைத்து மாவட்ட கல்வி அலுவலகத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், ஆசிரியர்களுக்கான ஆயுள் காப்பீடுத் திட்டத்துக்கான பிரிமியத் தொகையை வழக்கம்போல வட்டாரக் கல்வி அலுவலகம் மூலம் பிடித்தம் செய்து செலுத்தவேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டணியின் தலைவர் இரா. சரவணன்  தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வட்டாரச் செயலர் சி. முத்துசாமி, மாவட்டச் செயலர் ப. பார்த்தசாரதி, மாநில துணைச் செயலர் என். வீரராகவன், நிர்வாகிகள் ஆர். குருபரன்உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், கனவு ஆசிரியர் விருதுபெற்ற ஆசிரியர் க. சுப்பிரமணியன் பாராட்டப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.