தவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

அம்பேத்கர் சிலை அகற்றியதை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்

காளகஸ்திநாதபுரத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை அகற்றியதை கண்டித்து வெள்ளிக்கிழமை (மார்ச் 30) ஆர்ப்பாட்டம் நடத்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி முடிவெடுத்துள்ளது. 

Updated On :29 மார்ச் 2018, 4:05 am

காளகஸ்திநாதபுரத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை அகற்றியதை கண்டித்து வெள்ளிக்கிழமை (மார்ச் 30) ஆர்ப்பாட்டம் நடத்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி முடிவெடுத்துள்ளது. 
செம்பனார்கோவில் காளகஸ்திநாதபுரம் அம்பேத்கர் நகர் காலணியில் அப்பகுதி இளைஞர்களால் அமைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் சிலையை வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர். இதையறிந்த,  மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலர் சீனிவாசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் சிம்சன், வட்டச் செயலர் மார்க்ஸ், வட்டத் தலைவர் இளையராஜா ஆகியோர் சிலை அகற்றிய பகுதிக்கு சென்று சம்பவம் குறித்து விவரம் கேட்டறிந்தனர். இதையடுத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மார்ச் 30-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்து முடிவெடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.