அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்எல்ஏக்கள் நிவாரண உதவி

செம்பனார்கோவில் அருகேயுள்ள எருமல் கிராமத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சட்டப் பேரவை உறுப்பினர்கள் பி.வி. பாரதி, எஸ். பவுன்ராஜ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆறுதல் கூறி,

News image
Updated On :14 மே 2018, 11:55 pm

DIN

செம்பனார்கோவில் அருகேயுள்ள எருமல் கிராமத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சட்டப் பேரவை உறுப்பினர்கள் பி.வி. பாரதி, எஸ். பவுன்ராஜ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆறுதல் கூறி, நிவாரண உதவிகள் வழங்கினர்.
செம்பனார்கோவில் ஒன்றியம், எருமல் காந்தி நகரில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் புருஷோத்தமன், நாகராஜ், திருவாதுரை, வரதராஜன், செல்வராஜ் மற்றும் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.
இதுகுறித்து தகவலறிந்த எம்எல்ஏ பி.வி. பாரதி நிகழ்விடத்துக்குச் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், தனது சொந்த செலவில் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 5,000 மற்றும் வேட்டி, சேலை உள்ளிட்ட பொருள்களை வழங்கினார்.
அப்போது, எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ், வைத்தீஸ்வரன்கோவில் பேருர் கழகச் செயலாளர் போகர்ரவி, கூட்டுறவு வங்கித் தலைவர் கபாடி பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.