நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின பாதுகாப்பு சரணாலயத்தில் தாழ்வான பரப்பில் மழைநீர் தேங்கியதால், பார்வையாளர்களை அனுமதிக்க மேலும் ஒருவாரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோட்டியக்கரையில் வெப்ப மண்டல எல்லைக் கோட்டில் அமைந்துள்ள பசுமை மாறா வனப் பகுதி வன உயிரின பாதுகாப்பு சரணாலயமாக அமையப்பெற்றுள்ளது. இங்கு அரிய வகை வெளிமான், புள்ளிமான், காட்டுப் பன்றி, நரி, மட்டக் குதிரை, குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், வனப் பரப்புக்குள் தாழ்வான பகுதிகள், சாலைகளில் தேங்கிய மழைநீர் வடிவதில் தாமதமானது.
இதையடுத்து, நவ. 5 முதல் 12 -ஆம் தேதி வரையில் வனப் பகுதிக்குள் பார்வையாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதனிடையே, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வடிவதும், சாலைகளில் வாகனங்கள் செல்ல ஏற்ற சூழல் ஏற்படுவதும் மேலும் தாமதமாகி வருவதால், நவ. 18 -ஆம் தேதி வரை மேலும் ஒருவார காலம் பார்வையாளர்கள் உள்ளே செல்ல தடை நீட்டிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 5 ஹரியாணா எம்எல்ஏக்கள் இடைநீக்கம்! காங்கிரஸ் அதிரடி!
அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்

மும்பை பேட்டிங்; பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா இல்லை!

இது தெரியுமா? தலைகீழாக மரம் வளருமா?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

