சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் பார்வையாளர்களுக்கு மேலும் ஒருவாரம் தடை

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின பாதுகாப்பு சரணாலயத்தில் தாழ்வான பரப்பில் மழைநீர் தேங்கியதா

News image
Updated On :12 நவம்பர் 2018, 11:59 pm

DIN


நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின பாதுகாப்பு சரணாலயத்தில் தாழ்வான பரப்பில் மழைநீர் தேங்கியதால், பார்வையாளர்களை அனுமதிக்க மேலும் ஒருவாரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோட்டியக்கரையில் வெப்ப மண்டல எல்லைக் கோட்டில் அமைந்துள்ள பசுமை மாறா வனப் பகுதி வன உயிரின பாதுகாப்பு சரணாலயமாக அமையப்பெற்றுள்ளது. இங்கு அரிய வகை வெளிமான், புள்ளிமான், காட்டுப் பன்றி, நரி, மட்டக் குதிரை, குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், வனப் பரப்புக்குள் தாழ்வான பகுதிகள், சாலைகளில் தேங்கிய மழைநீர் வடிவதில் தாமதமானது.
இதையடுத்து, நவ. 5 முதல் 12 -ஆம் தேதி வரையில் வனப் பகுதிக்குள் பார்வையாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதனிடையே, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வடிவதும், சாலைகளில் வாகனங்கள் செல்ல ஏற்ற சூழல் ஏற்படுவதும் மேலும் தாமதமாகி வருவதால், நவ. 18 -ஆம் தேதி வரை மேலும் ஒருவார காலம் பார்வையாளர்கள் உள்ளே செல்ல தடை நீட்டிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.