கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

மரத்தில் இருசக்கர வாகனம் மோதி இளைஞர் சாவு

நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள புத்தூரில் புளியமரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில், இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 

Updated On :3 செப்டம்பர் 2018, 2:15 am

நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள புத்தூரில் புளியமரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில், இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 
கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் கிராமம், கதிர்வேல் செட்டியார் தெருவைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி பாலு மகன் விதன் (21). இவர்  கடலூரிலிருந்து நாகை மாவட்டம், வேளாங்கண்ணி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், சிதம்பரம்- சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி எதிரே உள்ள புளியமரத்தில் அவரது இருசக்கர வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த விதன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த கொள்ளிடம் போலீஸார், அவரது சடலத்தைக் கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.