தடகளப் போட்டியில் சிறப்பிடம்: மாணவர்களுக்குப் பாராட்டு

மண்டல அளவிலான தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கல்லூரி மாணவர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. 

மண்டல அளவிலான தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கல்லூரி மாணவர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. 
நாகை மாவட்டம், கொல்லுமாங்குடி ஏழுமலையான் தொழில்நுட்பக் கல்லூரியில் மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் அண்மையில்   நடைபெற்றன.
இப்போட்டிகளில் பல்வேறு தொழில்நுட்பக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில், காழியப்பன் நல்லூர் தொன்போஸ்கோ தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் முதல் நான்கு இடங்களைப் பிடித்தனர். 
இம்மாணவர்களை கல்லூரி தாளாளர் டேனியல் ஜெபஸ்டின் மற்றும் கல்லூரியின் நெறியாளர், பொருளாளர், முதல்வர், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com