மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரி மாணவிகள் மாநில அளவில் நடைபெற்ற பெண்களுக்கான கடற்கரை கையுந்து பந்து போட்டியில், முதலிடம் பெற்று 3-ஆவது ஆண்டாக தொடர்ந்து சாதனை படைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரையில் மாநில அளவில் கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான 2 நாள் கடற்கரை கையுந்து பந்து போட்டி நடைபெற்றது. இதில், நாகை மாவட்டம் சார்பில் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியின் மூன்றாம் ஆண்டு கணிப்பொறியியல் துறை மாணவி ஆர். இளவரசி, மூன்றாம் ஆண்டு கணினி பயன்பாட்டியல் துறை மாணவி ஆர். மகாலெட்சுமி ஆகியோர் பங்கேற்று, மாநில அளவில் முதலிடம் பெற்றனர். இதன்மூலம் இக்கல்லூரி 3-ஆவது முறையாக தொடர்ந்து இந்த சாதனையைப் படைத்துள்ளது. வெற்றிபெற்ற மாணவிகளை ஏ.வி.சி. கல்லூரியின் ஆட்சிமன்றக் குழு தலைவர் என். விஜயரங்கன், செயலர் கே. கார்த்திகேயன், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், முதல்வர் ஆர். நாகராஜன், உடற்கல்வி இயக்குநர்கள் ஜே. ராஜ்குமார், எம். கீதா மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மனித உரிமை செயல்பாட்டாளர்களை மண்டியிடச் செய்த இஸ்ரேல் அமைச்சர்: வலுக்கும் கண்டனம்!

இன்றைய செய்திகள்! - நேரலை

அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: காங்கிரஸ்

இத்தாலியில் பிரதமர் ஜார்ஜியா உடன் மோடி சந்திப்பு - புகைப்படங்கள்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


